தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் தற்போது 8ஆம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வாய்ப்பு அலுவலக உதவியாளர், அலுவலக காவலர் மற்றும் ஓட்டுநர் போன்ற பல்வேறு பணியிடங்களை உள்ளடக்கியதாகும். மொத்தம் 80 காலியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ளன. கோவையில் 18 இடங்கள், தஞ்சாவூரில் 31, வேலூரில் 5, கடலூரில் 9, திருப்பூர், செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடம், திருச்சியில் 8, தூத்துக்குடியில் 2 மற்றும் நாகர்கோவிலில் 5 இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.