இந்த வேலைவாய்ப்பின் முக்கிய அம்சம், அரசு அமைப்பில் பணியாற்றும் அனுபவத்துடன் நல்ல வருமானமும் கிடைப்பதுதான். தற்போது தனியார் மருத்துவ துறையில் பணிபுரியும் பல இளைஞர்கள் கூட ஆர்பிஐ போன்ற மத்திய அமைப்புகளில் வேலை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜூன் 16 விண்ணப்பிக்க கடைசி நாள், தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு வட்டாரங்கள் அறிவுறுத்துகின்றன.