பொதுத்தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித உதறல் எடுப்பது சகஜம். "சிலபஸ் முடிச்சாச்சா?", "ரிவிஷன் பண்ணியாச்சா?", "மார்க் குறையுமோ?" என்ற பயம் மாணவர்களை மட்டுமல்ல, பெற்றோர்களையும் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, 2026-ம் ஆண்டு போர்டு தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு இந்த அழுத்தம் சற்று அதிகமாகவே இருக்கலாம். ஆனால், கவலை வேண்டாம்! மாணவர்களின் இந்த 'எக்ஸாம் ஸ்ட்ரெஸ்ஸை' (Exam Stress) குறைக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஒரு சூப்பரான முடிவை எடுத்துள்ளது.
கல்வி என்பது வெறும் புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்ல, ஒரு மாணவனின் முழுமையான வளர்ச்சியும் சார்ந்தது என்பதை உணர்ந்துள்ள CBSE, பள்ளிகளுக்கு ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், வரவிருக்கும் தேர்வுகளுக்கு முன்பாக மாணவர்களின் மனநலம் (Mental Health) மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கறாராகத் தெரிவித்துள்ளது.