நாட்டின் மிகப்பெரிய பொது துறை அமைப்பான இந்திய ரயில்வே, பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 5,810 காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தலைமை வணிக டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர், முதுநிலை எழுத்தர் மற்றும் போக்குவரத்து உதவியாளர் போன்ற முக்கிய பதவிகள் இதில் அடங்குகின்றன.
ரயில்வே துறையில் நிலையான வேலை, கையிருப்புச் சம்பளம், பயணச்சலுகை, ஓய்வூதிய நன்மைகள் போன்ற காரணங்களால், அரசுத் துறையில் வேலையை விரும்பும் இளைஞர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக அமைகிறது.