இந்நிலையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் Community Skill Schools வாயிலாக, 50,000 கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க அரசு முக்கிய முடிவெடுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 2,500 திறன் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்களை அதனை பயன்படுத்திகொண்டால் தமிழகம் தொழல் வளர்ச்சிதுறையில் புதுமை படைக்கும் என்றால் அது மிகையல்ல.
இந்தப் பள்ளிகள் மூலம் எலக்ட்ரீஷியன், இருசக்கர வாகன சரி செய்யுதல், AC மெக்கானிக் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட துறைகளில் நேரடி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் கிராமப்புற இளைஞர்கள், சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்று பயிற்சியை பெறலாம். 18 முதல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு தங்களது எதிர்காலத்தை மகிழ்ச்சியாக மாற்றிகொள்ளலாம். இதற்கு கல்வி தகுதி தேவையில்லை. ஆர்வமும் ஊக்கமும் இருந்தாலே போதும் என தெரவிக்கப்பட்டுள்ளது.