கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், இளைஞர்களுக்கு 30 நாட்கள் இலவச கார் ஓட்டுனர் பயிற்சியை வழங்குகிறது. இந்த பயிற்சியில் உணவு, சீருடை, அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் ஆகியவை அடங்கும்.
இன்றைய காலகட்டத்தில் நிலையான வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திறன் பயிற்சிகள் மிகவும் அவசியமாக உள்ளன. அந்த வகையில், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் வேலைதேடும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் பல்வேறு இலவச பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்றாக, இப்போது இலவச கார் ஓட்டுனர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
25
பயிற்சி விவரங்கள்
கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த இலவச கார் ஓட்டுனர் (LMV Driver Training) பயிற்சி 30-12-2025 முதல் 07-02-2026 வரை மொத்தம் 30 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பயிற்சி, சீருடை, உணவு உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படுவதால், பயிற்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பை பெறுவது எளிதாகும்.
35
தகுதி மற்றும் பயனாளர்கள்
இந்த பயிற்சியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வயது வரம்பாக 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க தகுதியுடையவர்கள்.
பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு கட்டாயம். இதற்காக 8778323213, 7200650604, 0424-2400338 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். பயிற்சி நடைபெறும் இடம்: கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், அரசினர் பொறியியல் கல்லூரி (IRTT) சாலை, வாசவி கல்லூரி அருகில், சித்தோடு, ஈரோடு.
55
அரசு சான்றிதழுடன் கூடிய பயிற்சி
இலவசமாக வழங்கப்படும் இந்த கார் ஓட்டுனர் பயிற்சி, வேலைவாய்ப்பை தேடும் இளைஞர்களுக்கும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். அரசு சான்றிதழுடன் கூடிய இந்த பயிற்சியை பயன்படுத்திக் கொண்டு, எதிர்காலத்தில் உறுதியான வருமானம் மற்றும் நல்ல வாழ்க்கையை உருவாக்க விரும்புவோர், இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.