அடோப் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் கீழ்க்காணும் மூன்று சாஃப்ட்வேர்களை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்:
1. Adobe Firefly: அதிநவீன AI தொழில்நுட்பம் மூலம் டெக்ஸ்ட்-ஐ படமாக மாற்றும் (Text-to-Image) சாஃப்ட்வேர்.
2. Adobe Photoshop: உலகின் மிகச்சிறந்த புகைப்பட எடிட்டிங் தளம்.
3. Adobe Acrobat: PDF கோப்புகளை உருவாக்கவும், திருத்தவும் உதவும் சாஃப்ட்வேர்.
இவற்றுடன், மாணவர்களுக்கான பயிற்சி (Training) மற்றும் சான்றிதழ்களையும் (Credentials) அடோப் நிறுவனம் வழங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களின் கல்வியை முடித்து வெளியேறும் போது, வேலைவாய்ப்புச் சந்தையில் தனித்து நிற்க முடியும் என அடோப் நம்பிக்கை தெரிவித்துள்ளது.