Published : May 28, 2025, 01:45 PM ISTUpdated : May 28, 2025, 04:23 PM IST
Zomato நிறுவனம் புதிய ‘தொலைதூர சேவை கட்டணத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளதால், வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. 4 கிமீட்டருக்கு மேல் டெலிவரி செய்யும் உணவுகளுக்கு இந்தக் கட்டணம் பொருந்தும், இதனால் உணவு விலை அதிகரிக்கும்.
குளிர், வெயில், மழை என எந்த காலநிலையிலும் வீட்டிலிருந்தபடியே மோமோஸ், பானி பூரி முதல் இரவு உணவு வரை கையில் கொண்டு வந்து கொடுக்கும் Zomato நிறுவனம் தற்போது சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தூரத்திற்கு தகுந்தால் போல் சேவை கட்டணம் அதிகரித்துள்ளதால் உணவு விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
25
Extra payment for food
நாட்டின் பிரபலமான உணவு டெலிவரி செயலிகளில் ஒன்றான Zomato புதிய ‘தொலைதூர சேவை கட்டணத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிமுறையின்படி, ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் விளைவாக, உணவு பில்லுடன் கூடுதல் செலவு சேர்க்கப்படுகிறது, இது உணவு பிரியர்களின் பணப்பையையும், உணவக உரிமையாளர்களையும் பாதிக்கிறது.
35
தூரம் செல்ல செல்ல விலை உயரும் உணவு
உணவகம் அல்லது ஹோட்டலில் இருந்து வாடிக்கையாளரின் முகவரிக்கு டெலிவரி செய்யும் தூரம் 4 கிலோமீட்டருக்கு மேல் இருந்தால், இந்த கூடுதல் கட்டணம் பொருந்தும் என்று ஜோமாட்டோ தெரிவித்துள்ளது. 4 முதல் 6 கிமீ தூரத்திற்கு உணவு ஆர்டர் ₹150 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், வாடிக்கையாளர் கூடுதலாக ₹15 சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.
45
சேவை கட்டணம் உயர்வு
6 கிமீக்கு மேல் தூரம் என்றால், சேவை கட்டணம் ₹25 முதல் ₹35 வரை இருக்கும், ஆனால் அது நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம். இந்த கூடுதல் கட்டணம் அதிகபட்சம் 30% வரை மட்டுமே இருக்கும் என்றும் Zomato தெரிவித்துள்ளது. ஆனால், பல சந்தர்ப்பங்களில், வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படும் இந்த கூடுதல் கட்டணம் மற்ற கட்டணங்களுடன் சேர்ந்து 45% வரை கூட செலவுகூடும் என்று உணவக உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர்.
55
உணவக உரிமையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
Zomatoவின் இந்த கூடுதல் கட்டணத்தால், வாடிக்கையாளர்கள் தொலைதூர உணவகங்களில் இருந்து உணவை ஆர்டர் செய்வது குறையும், சாதாரண தூரத்தில் உள்ள உணவகங்களில் இருந்தும் ஆர்டர் செய்வது குறையும் என்று பல உணவக உரிமையாளர்கள் கருதுகின்றனர். நஷ்டம் அதிகரிக்கும். ஜோமாட்டோ மட்டுமல்ல, உணவகங்களும் நஷ்டத்தை சந்திக்கும் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.