முன்பு இருந்த ஒரு பழைய நடைமுறையின்படி, ஒரு பிஎஃப் கணக்கில் மூன்று ஆண்டுகள் எந்தப் பணமும் டெபாசிட் செய்யப்படவில்லை என்றால், அது 'செயல்படாத கணக்காக' (Inactive Account) கருதப்பட்டு வட்டி நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை நிலவியது. இதனால் பலர் நீண்ட கால கூட்டு வட்டி (Compound Interest) மற்றும் வரி விலக்கு பலன்களை இழக்க நேரிடுகிறது.
ஆனால், 2016-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி, இந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி:
• ஒரு ஊழியருக்கு 58 வயது ஆகும் வரை அவரது பிஎஃப் கணக்கு 'செயல்படாத கணக்காக' கருதப்படாது.
• நீங்கள் வேலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் 58 வயது வரை பிஎஃப் கணக்கில் வட்டி தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.
• 58 வயதிற்குப் பிறகுதான் வட்டி வரவு வைக்கப்படுவது நிறுத்தப்படும்.