பிறகு மீண்டும் ரூ.5,000, ரூ.10,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து சில பரிசீலனைகள் நடந்தன. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மீண்டும் கொண்டுவரலாம் என்று பரிந்துரைத்தார் என்றும் பிறகு அவரே அந்த யோசனையைக் கைவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
2016ஆம் ஆண்டு மோடி திடீரென்று அறிவித்த பணமதிப்புநீக்க நடவடிக்கையின் போது ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. அதற்குப் பதிலாக முதலில் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், 2023ஆம் ஆண்டு ரூ.2,000 நோட்டுகளும் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது.
2,000 நோட்டுக்குப் பதிலாக புதிய 1,000 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்று தகவல்கள் வந்தன. ஆனால், இன்றுவரை அதற்காக அதிகாரபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதனால் இப்போது இந்தியாவில் 500 ரூபாய்தான் அதிகபட்ச மதிப்புள்ள ரூபாய் நோட்டாக இருக்கிறது.