இதனால், பழைய 5 ரூபாய் நாணயங்கள் தவறான வழிகளில் வங்கதேசத்திற்குக் கடத்தப்பட்டன. அங்கு இந்த நாணயங்கள் உருகப்பட்டு, அந்த உலோகத்திலிருந்து பிளேடுகள் செய்யப்பட்டன. ஒரு நாணயத்தை உருக்கி ஆறு பிளேடுகள் செய்ய முடிந்தது. ஒரு பிளேடு 2 ரூபாய் வீதம், 12 ரூபாய்க்கான பிளேடுகளை ஒரே ஒரு 5 ரூபாய் நாணயத்திலிருந்து தயாரிக்க முடியும். இதனால், கடத்திச் செல்லப்பட்ட 5 ரூபாய் நாணயங்களை பயன்படுத்தி அங்குள்ள மக்கள் மிகவும் பயனடைந்தனர்.