குழந்தைகளின் வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது. அந்த வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை செய்து வருகின்றனர். குழந்தைகளுக்காக தங்கம் சேமிப்பது. நிலத்தில் முதலீடு செய்வது, படிப்பிற்காக வங்கியில் பணம் கட்டுவது என பல திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இதே போல எல்ஐசி தொடங்கி போஸ்ட் ஆபிசில் உள்ள பல திட்டங்களுக்கு மாதம், மாதம் ஒரு தொகையை ஒதுக்கி வருகின்றனர், மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.