What would happen if people stopped buying gold : தங்கம் விலை ஏறிக்கொண்டே வருவதால், தங்கம் வாங்காதீங்கன்னு பிரதமர் மோடி சொல்லியிருக்கார். மக்கள் தங்கம் வாங்குறதை நிறுத்திட்டா என்ன நடக்கும்? தங்கத்தை நம்பி இருக்கிறவங்களோட நிலைமை என்ன ஆகும் தெரியுமா?
தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறுவதால், மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தினால், பல கோடி ரூபாய் சேமிக்கப்படும் என்பது உண்மைதான். ஆனால், இதனால் பாதிக்கப்படும் ஒரு தரப்பினரின் நிலை என்ன?
24
கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் நகை தொழிலாளர்கள்
உலக தங்க கவுன்சில் (World Gold Council) கணக்குப்படி, இந்தியாவில் சுமார் 5 லட்சத்தில் இருந்து 6 லட்சம் வரை சிறிய மற்றும் பெரிய நகைக்கடைக்காரர்கள் இருக்கிறார்கள். பெரிய கார்ப்பரேட் பிராண்டுகள் முதல் தெருமுனையில் இருக்கும் சின்னக் கடைக்காரர் வரை இதில் அடக்கம். ஷோரூம் உரிமையாளர்கள், டிசைனர்கள், கைவினைஞர்கள், பாலிஷ் செய்பவர்கள் என சுமார் 5 லட்சம் பேர் இந்தத் தொழிலை நேரடியாக நம்பி வாழ்கின்றனர்.
34
வேலை பறிபோகும் சூழலில் கைவினைஞர்கள்
மக்கள் தங்கம் வாங்குவது குறைந்தால், அதன் தேவை குறையும். இதனால், நகை செய்யும் கைவினைஞர்கள் வேலை இழக்க நேரிடும். பெரிய நகைக்கடைக்காரர்கள் நஷ்டத்தைத் தவிர்க்க ஊழியர்களை வேலையை விட்டு நீக்கலாம். சிறிய கடைக்காரர்கள் சம்பளம் கொடுக்க முடியாமல் கடையை மூடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனால் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதற்கு ஒரு மாற்று வழியும் இருக்கிறது. நகைக்கடைக்காரர்கள் புதிய தங்கம் வாங்குவதற்குப் பதிலாக, பழைய நகைகளை கொடுத்து புதிய டிசைன்களில் மாற்றித் தருவதை ஊக்குவிக்கலாம். இதற்காக அவர்கள் வாங்கும் அதிகப்படியான கட்டணங்களைக் குறைத்துக் கொண்டால், மக்கள் பழைய நகைகளைக் கொடுத்து புதியதை வாங்க முன்வருவார்கள். இது நடந்தால், தங்கச் சந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.