பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) வைத்திருக்கும் உரிமை கோரப்படாத நிதிகள் பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் விவாதப் பொருளாகிவிடுகின்றன. இதில், பாலிசிதாரர்களின் உரிமை கோரப்படாத பணத்தின் தரவுகளை எம்.பி.க்கள் அடிக்கடி கேட்கிறார்கள்.
சமீபத்தில் முடிவடைந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் கேள்விகளுக்குப் பதிலளித்த நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, இந்தப் பிரச்சினையை வெளிச்சம் போட்டுக்காட்டினார். அதைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தார்.