இது உங்கள் சேமிப்பு கணக்கையும், நிலையான வைப்புத் தொகையையும் (Fixed Deposit - FD) இணைக்கும் ஒரு வசதியாகும். உங்கள் கணக்கில் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பணம் இருந்தால், அந்த உபரித் தொகையை வங்கி தானாகவே எஃப்டி (FD) கணக்கிற்கு மாற்றிவிடும்.
உதாரணமாக, உங்கள் கணக்கில் ரூ. 50,000-க்கு மேல் இருக்கும் பணத்திற்கு ஆட்டோ ஸ்வீப் வசதி செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்கள் கணக்கில் ரூ. 80,000 இருந்தால், அதில் உள்ள உபரித் தொகையான ரூ. 30,000 தானாகவே எஃப்டி கணக்கிற்கு மாறிவிடும். இதற்கு எஃப்டி-க்கு இணையான (7% - 8%) வட்டி கிடைக்கும். மீதமுள்ள ரூ. 50,000-க்கு வழக்கமான சேமிப்பு கணக்கு வட்டி கிடைக்கும்.