நிஃப்டி, சென்செக்ஸ் மந்தம்: முதலீட்டாளர்கள் எதற்காக காத்திருக்கிறார்கள்?

Published : Feb 01, 2026, 11:53 AM IST

யூனியன் பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்படும் சிறப்பு வர்த்தக நாளில், இந்திய பங்குச் சந்தைகள் எச்சரிக்கையுடன் தொடங்கின. நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருப்பதால், நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் பெரிய மாற்றமின்றி வர்த்தகமாகின்றன.

PREV
12
பட்ஜெட் 2026 பங்குச் சந்தை

பட்ஜெட் 2026 நாளுக்காக நடத்தப்படும் சிறப்பு வர்த்தக அமர்வில், இந்திய பங்குச் சந்தைகள் இன்று மந்தமான தொடக்கத்தைக் கண்டன. முதலீட்டாளர்கள் பட்ஜெட் அறிவிப்புகளை எதிர்நோக்கி காத்திருந்ததால், ஆரம்ப வர்த்தகத்தின் முக்கிய குறியீடுகள் பெரிய மாற்றமின்றி நகர்ந்தன. நிஃப்டி 25,300 புள்ளிகளுக்கு மேல் நிலைத்திருந்த நிலையில், பிஎஸ்இ சென்செக்ஸ் 82,300 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் செய்தது. ஞாயிற்றுக்கிழமை என்றாலும், பட்ஜெட் காரணமாக சந்தைகள் திறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மக்களவையில் நிர்மலா சீதாராமன் யூனியன் பட்ஜெட் 2026-ஐ தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் உரை முடிந்த பின்னர், அதன் பிரதியை ராஜ்யசபையிலும் சமர்ப்பிக்கப்படும். கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டின் பட்ஜெட்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி திசை மற்றும் துறைவாரியான முன்னுரிமைகளை நிர்ணயிக்கும் ஆவணமாக பார்க்கப்படுகிறது.

22
பங்குச் சந்தை இன்று

2026-27 நிதியாண்டுக்கான அரசின் நிதி பாதை வரைபடம் எப்படி இருக்கும் என்பதில் முதலீட்டாளர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக நிதிக் குறிக்கோள்கள், வரி தொடர்பான முன்மொழிவுகள், அரசு செலவுத் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து சந்தையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், சந்தை தற்போது எச்சரிக்கையாக நகர்கிறது.

இதற்கிடையே, தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் கடும் ஏற்றத் தாழ்வுகள் பதிவாகியுள்ளன. மூலதன ஆதார வரி (மூலதன ஆதாய வரி) தொடர்பான அறிவிப்புகள் சந்தையை பாதிக்கக்கூடும் என்பதால், டாலல் ஸ்ட்ரீட் அதை உற்றுநோக்கி வருகிறது. கடந்த ஆண்டில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் மீண்டும் திரும்பப் பெறப்படுமா என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களிடையே உள்ளது.

பட்ஜெட் நாளுக்காக என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ சிறப்பு வர்த்தக அமர்வை நடத்துகின்றன. காலை 9.15 முதல் மாலை 3.30 மணி வரை வழக்கமான நேரத்தில் வர்த்தகம் நடைபெறும். மேலும், எம்சிஎக்ஸ் மூலம் பொருட்சந்தையும் திறந்திருக்கும். சந்தை வல்லுநர்கள் கூறுவதன்படி, பட்ஜெட் நாள் பொதுவாக அதிக அதிர்வுகளை காணும் என்பதால், இன்ட்ராடே வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories