தமிழகத்தில் அரியவகை கனிமங்களை எடுப்பதற்கான புதிய மையங்களை அமைக்க இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
2026 – 27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார். தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்றைய பட்ஜெட் உரையில் தமிழகத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
23
கனிமங்களை எடுக்க மையங்கள் அமைப்பு
இந்த நிலையில் அரியவகைக் கனிமங்களை எடுப்பதற்கான புதிய மையங்களை தமிழகத்தில் அமைக்கப் போவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி கனிமவளங்களை எடுப்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
33
முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாடு
சுரங்கம், பதப்படுத்துதல், உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக பிரத்யேக அரிய மண் வழித்தடங்களை நிறுவுவதற்கு தமிழ்நாடு உட்பட கனிம வளம் மிக்க மாநிலங்களை ஆதரிக்க மத்திய அரசு முன்மொழிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.