வீட்டின் மாடி காலியா இருக்குதா? அந்த வெற்றிடம் உங்கள் வருமானத்தை மாற்றும் ரகசியமாக இருக்கலாம். பெரிய முதலீடு இல்லாமலே, வீட்டிலிருந்தபடியே லட்சம் சம்பாதிக்க ஒரு வழி இருக்கிறது.
வியாபாரம் செய்ய பெரிய முதலீடு, வெளியே போய் வேலை பார்க்க வேண்டுமென்ற எண்ணமும் பலரிடம் உள்ளது. ஆனால், சரியான யோசனை இருந்தால் வீட்டிலிருந்தபடியே நல்ல வருமானம் பெற முடியும். அதற்கான ஒரு சுவாரஸ்யமான வழி தான் மாடி (terrace) இடத்தை பயன்படுத்தி மீன் வளர்ப்பு தொழில். பல வீடுகளில் மாடி பகுதி வெறுமையாகவே இருக்கும். சிலர் செடிகள் வளர்ப்பதற்காக மட்டும் பயன்படுத்துவார்கள்.
24
குறைந்த முதலீட்டில் லட்சம் சம்பாதிக்கலாம்
ஆனால் அதே இடத்தை சிறிய அளவில் தொழிலாக மாற்றினால், கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். நகரங்களில் நிலம் குறைவாக இருக்கும் நிலையில், மாடி மீன் வளர்ப்பு ஒரு நல்ல மாற்று வாய்ப்பாக தற்போது பலரால் முயற்சிக்கப்படுகிறது. இந்த தொழிலை தொடங்குவது சுலபம். மாடியில் ஃபைபர் அல்லது சிமெண்ட் டேங்குகளை அமைத்து, அதில் சுத்தமான நீரை நிரப்ப வேண்டும்.
34
மீன் வளர்ப்பு தொழில்
பிறகு மீன் குஞ்சுகளை விடலாம். தினசரி சிறிதளவு தீவனம் கொடுத்து, நீரின் தரத்தை பராமரித்தால் போதும். குறைந்த இடம் இருந்தாலும் 4 முதல் 5 டேங்குகளுடன் தொடங்கலாம். இந்த தொழிலில் விரால் (Murrel) மீன் வளர்ப்பு அதிக லாபம் தரக்கூடியதாக உள்ளது. இந்த மீனுக்கு சந்தையில் நல்ல கேள்வி உள்ளது. தற்போது ஒரு கிலோ விரால் மீன் ரூ.400 வரை விலை கிடைக்கிறது. ஹோட்டல்கள், மார்க்கெட்டுகள் மற்றும் விழாக்களில் இந்த மீனுக்கு அதிக தேவை உள்ளது.
தொடக்க முதலீடு அதிகமாக தேவையில்லை. சுமார் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை முதலீட்டில் இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். சில வங்கிகள் இந்த துறைக்கு கடன்களையும் வழங்குகின்றன. சரியான திட்டமிடலுடன் செய்தால், 6 மாதத்திற்கு ஒரு முறை நல்ல மகசூல் கிடைக்கும். ஒரு சீசனில் நல்ல வருமானம் கிடைத்தால், மாதத்திற்கு லட்சம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டிலிருந்தபடியே வருமானம் பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.