செப்டம்பர் 30 கடைசி தேதி.. மிஸ் பண்ணாதீங்க - யார் தாக்கல் செய்ய வேண்டும்?

Published : Sep 19, 2025, 09:35 AM IST

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு சிறப்பு சலுகைகள் உள்ள நிலையில், இந்த விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால் அபராதம் விதிக்கப்படும், இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும்.

PREV
15
வருமான வரி கடைசி தேதி

வரி தாக்கல் செய்வதில் சில வரி செலுத்துபவர்கள் தனிப்பட்ட சலுகைகளை பெறுகின்றனர். வருமான வரி சட்டம் 1961–இன் பிரிவு 44AB படி, குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வரி செலுத்துபவர்கள் ஆடிட் ரிப்போர்ட் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 என்று அரசு அறிவித்துள்ளது.

25
தணிக்கை அறிக்கை

ஒரு தொழில் நடத்துபவரின் ஆண்டு வருவாய் ரூ.1 கோடியை மீறினால் அவர் கட்டாயமாக வரி ஆடிட் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் 95% பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் நடந்தால், இந்த வரம்பு ரூ.10 கோடியாக உயர்கிறது. இதன் மூலம் அரசு காசில்லா பரிவர்த்தனைக்கு ஊக்கம் தருகிறது.

35
செப்டம்பர் 30

மருத்துவர், வழக்கறிஞர், கட்டிட நிபுணர், சிஏ போன்றவர்கள் தனித்தொழில் செய்து வருடத்திற்கு ரூ.50 லட்சத்தை மீறினால் அவர்களும் ஆடிட் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் 44ADA பிரிவில் வரும் முன்கூட்டியே நிர்ணயித்த வரி திட்டத்தில் (முன்கூட்டிய வரிவிதிப்பு) குறைவான வருமானத்தை காட்டுபவர்களும் ஆடிட் செய்ய வேண்டும்.

45
டிஜிட்டல் பரிவர்த்தனை

இந்தத் திட்டத்தின் கீழ் சில தொழில்முனைவோர் மட்டும் பயன்பெற முடியும். 50% வருமானம் வருவாய் எனக் கருதி கணக்கிடப்படும். பண பரிவர்த்தனை 5%–ஐ தாண்டக்கூடாது. இதனால் சிறிய அளவிலான தொழில், நிபுணர்கள் பயன்பெறலாம்.

55
ப்ரொஃபஷனல்ஸ் வரி

ஆனால் உண்மையான வருமானம் குறைவாக உள்ளது என்று சொன்னால், கணக்கு புத்தகங்களை பராமரித்து ஆடிட் ரிப்போர்ட் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். இதனை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை ஏற்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories