ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதற்கான முதல் விதி, உரிமை தொடர்பாக எந்தவிதமான சர்ச்சையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதுதான். வாங்க நினைக்கும் விவசாய நிலம் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்டதாக பூர்வீகச் சொத்தாக இருக்கலாம். பொதுவாக, கிராமப்புறங்களில் உயில்கள் உருவாக்கப்படுவதில்லை. சொத்து ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு தானாகவே மாறிவிடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சொத்தின் உண்மையான உரிமையாளர் பற்றிய தகவலை தாலுகா அலுவலகத்தில் இருந்து பெறலாம். உள்ளூர் வழக்கறிஞரின் உதவியையும் நாடலாம்.
கூடுதலாக, எதிர்காலத்தில் வேறு யாரும் நிலத்தின் மீது உரிமைகோருவதைத் தவிர்க்க, குறிப்பிட்ட நிலத்தை நீங்கள் வாங்கப் போகிறீர்கள் என்றும், இதில் ஆட்சேபனை உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தொடர்புகொள்ளுமாறும் உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யலாம். முன்பணம் செலுத்தியவுடன், தாமதம் செய்யாமல் விரைவாக சொத்தை உங்கள் பெயரில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.