இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது IMPS (Instant Money Payment Service) ஆன்லைன் பணமாற்று விதிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து இன்று முதல் அமலுக்கு வந்தது.
புதிய விதிப்படி, எஸ்பிஐ ஆன்லைன் வழியாக ரூ.25,000 வரை IMPS மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் இல்லை. ஆனால் ரூ.25,000-க்கு மேல் ஒரு ரூபாய் கூட பணம் அனுப்பினால், அந்த பரிவர்த்தனைக்கு சேவை கட்டணம் விதிக்கப்படும். இதனால் பெரிய தொகைகளை டிரான்ஸ்ஃபர் செய்யும் பயனாளர்கள் இனி கவனத்துடன் செலுத்த வேண்டும்.