Savings Account: உங்கள் கணக்கில் அதிக பண பரிவர்த்தனைகள் இருந்தால், உங்கள் வங்கி அறிக்கைகள் மற்றும் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் வைத்திருங்கள். வங்கி சேமிப்பு கணக்கு லிமிட்டை பற்றி பார்க்கலாம்.
சேமிப்பு வங்கிக் கணக்கில் ரொக்கப் பணத்தை செலுத்துவது பொதுவான நடைமுறைதான். ஆனால் ஒரே நிதியாண்டில் அதிக அளவு ரொக்கப் பரிவர்த்தனைகள் நடைபெற்றன, அந்த விவரங்கள் வங்கியின் மூலம் வருமான வரித்துறையின் கவனத்திற்கும் செல்லலாம். தற்போதைய விதிகளின்படி, ஒரு நபரின் சேமிப்பு கணக்கில் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக செலுத்தப்பட்டால் அந்தப் பரிவர்த்தனை நிதிப் பரிவர்த்தனை அறிக்கையின் கீழ் வங்கியால் தெரிவிக்கப்பட வேண்டும். முக்கியமாக, பணம் செலுத்துவதற்கான தடை அல்ல. அதாவது, கணக்கில் ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தவே கூடாது என்ற பொதுவான விதி இல்லை.
25
வருமான வரி நோட்டீஸ்
உதாரணமாக, ஒருவரின் சேமிப்பு கணக்கில் ஆண்டு முழுவதும் பல முறை ரொக்கமாக பணம் செலுத்தப்பட்டு, அதன் மொத்த மதிப்பு ரூ.12 லட்சத்தை எட்டுகிறது. இந்தத் தொகை அறிக்கையிட வேண்டிய வரம்பை அடைந்திருப்பதால், வங்கி அதுதொடர்பான தகவலை வருமான வரித்துறைக்கு தெரிவிக்கலாம். ஆனால் இதனால் உடனடியாக அந்தப் பணத்துக்கு வரி விதிக்கப்படும் என்றோ, கட்டாயமாக வருமான வரி நோட்டீஸ் வந்துவிடும் என்றோ அர்த்தமில்லை. பணத்தின் மூலமும், அந்தத் தொகையும் உங்கள் வருமானத்துடன் பொருந்துகிறதா என்பதுதான் முக்கியமாகப் பார்க்கப்படும்.
35
ரொக்க பண பரிவர்த்தனைகள்
அதிக அளவு ரொக்கப் பணத்தை வங்கியில் செலுத்துபவர்கள், அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆதாரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். சம்பளம், தொழில் வருமானம், வாடகை, சொத்து விற்பனை, முதலீடு அல்லது வேறு சட்டபூர்வமான வழிகளில் பணம் கிடைத்திருந்தால், அதற்கான ஆவணங்கள் உதவியாக இருக்கும். வங்கி கணக்கு அறிக்கைகள், விற்பனை ஆவணங்கள், ரசீதுகள், வருமானப் பதிவுகள் போன்றவற்றை முறையாக வைத்திருப்பது பின்னர் விளக்கம் கேட்கப்பட்டால் பணத்தின் மூலத்தை தெளிவுபடுத்த உதவுகிறது. குறிப்பாக வருமானத்துடன் ஒப்பிடும்போது கணக்கில் அதிகமான ரொக்கப் பணம் தொடர்ந்து செலுத்தப்பட்டால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டியது வரும்.
மேலும், ஒரே நாளில் ரூ.50,000-க்கும் அதிகமான ரொக்க டெபாசிட் செய்யும்போது பான் விவரங்களை வழங்க வேண்டிய விதிமுறை உள்ளது. பான் இல்லாதவர்களுக்கு பொருந்தும் சூழ்நிலைகளில் விதிகளின்படி படிவம் 60 பயன்படுத்தப்படலாம். இந்த நடைமுறைகள் பெரிய ரொக்கப் பரிவர்த்தனைகளில் பணத்தின் மூலத்தை அடையாளம் காண உதவுகின்றன. மேலும், ஒருவரிடமிருந்து ஒரே நாளில் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக பெறுவது தொடர்பாகவும் வருமான வரிச் சட்டத்தில் தனியான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த விதிகளைத் தவிர்ப்பதற்காக ஒரு பெரிய தொகையை வேண்டுமென்றே பல சிறிய தொகைகளாகப் பிரிப்பது சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
55
வங்கி விதிகள்
எனவே, ரூ.10 லட்சம் என்பது சேமிப்பு கணக்கில் ரொக்கமாக வைத்திருக்கவோ செலுத்தவோ முடியாத அதிகபட்ச வரம்பு அல்ல. அது குறிப்பிட்ட ரொக்க டெபாசிட் பரிவர்த்தனைகள் அறிக்கையிடப்பட வேண்டிய முக்கியமான அளவாகும். பெரிய தொகையை வங்கியில் செலுத்துபவர்கள் தங்கள் வங்கி அறிக்கைகளை முறையாகச் சரிபார்த்து, ஒவ்வொரு முக்கியமான பரிவர்த்தனைக்கும் உரிய ஆதாரங்களை வைத்திருப்பது பாதுகாப்பான நடைமுறை. பணம் சட்டபூர்வமானதாக இருந்தாலும், அதன் மூலத்தை நிரூபிக்க முடியாத நிலை உருவாகாமல் தேவையான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எதிர்கால வருமான வரி தொடர்பான விளக்கங்களுக்கு உதவும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.