1. FCI கையிருப்பு அரிசியை திறந்த சந்தையில் விற்பனை செய்ய வேண்டும்
இந்திய உணவுக் கழகம் (FCI) கையிருப்பில் உள்ள அரிசியை Open Market Sale Scheme (OMSS) மூலம் அதிக அளவில் சந்தைக்கு கொண்டு வந்தால் விலை அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.
2. ரேஷன் மற்றும் கூட்டுறவு கடைகள் மூலம் கூடுதல் விநியோகம்
நியாயவிலைக் கடைகள் மற்றும் அமுதம் கூட்டுறவு அங்காடிகள் மூலம் தரமான அரிசியை குறைந்த விலையில் அதிகளவில் வழங்கினால், சில்லறை சந்தையில் ஏற்படும் அழுத்தம் குறையும்.
3. விவசாயிகளுக்கு கூடுதல் சாகுபடி ஊக்கத்தொகை
குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கான, மானியம் விதை உதவி உர மானியம் நியாயமான நெல் கொள்முதல் விலை ஆகியவற்றை அதிகரித்தால், எதிர்கால உற்பத்தி உயர்ந்து விலையும் நிலைநிறுத்தப்படலாம்.
4. நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும்
அறுவடைக்குப் பிறகு ஏற்படும் நெல் விரயத்தை குறைக்க, குளிர்சாதன வசதி நவீன கிடங்குகள் தரமான சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.