RBI New Rules For Gold Loan 2026 : வங்கிகளில் நகைக்கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நகைக்கடன் விதிகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நகைக்கடன் பெறுவதில் புதிய சிக்கல்? ஆர்.பி.ஐ-யின் அதிரடி உத்தரவு இதோ!
ஏப்ரல் 1, 2026 முதல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்க நகைக்கடன்களுக்கான புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. கடன் வழங்கும் முறையை அதிக வெளிப்படைத்தன்மையுடனும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த விதிகள் தங்கம் மட்டுமின்றி, வெள்ளி நகைகள் மீது பெறப்படும் கடன்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
25
கடன்-மதிப்பு விகிதம் (LTV) 75% மட்டுமே:
இனி நீங்கள் அடகு வைக்கும் தங்கத்தின் சந்தை மதிப்பில் அதிகபட்சமாக 75 சதவீதம் மட்டுமே கடனாகப் பெற முடியும். உதாரணமாக, உங்கள் தங்கத்தின் மதிப்பு ₹1 லட்சம் எனில், உங்களுக்கு ₹75,000 மட்டுமே கடனாகக் கிடைக்கும். தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியடையும் போது ஏற்படும் நிதி இடர்பாடுகளைத் தவிர்க்க இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
35
வட்டி விகித உயர்வு
வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFCs) நகைக்கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, கடன் வாங்குவதற்கு முன் பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகும். கட்டாய KYC மற்றும் ஆவணச் சரிபார்ப்பு
நகைக்கடன் பெறுபவர்கள் தங்களின் அடையாளச் சான்று (KYC) ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணப் பரிமாற்றங்கள் மற்றும் வாடிக்கையாளரின் பின்னணி குறித்து வங்கிகள் இனி கூடுதல் சோதனைகளை மேற்கொள்ளும்.
45
சீரான மதிப்பீட்டு முறை
அடகு வைக்கப்படும் தங்கத்தின் தூய்மை மற்றும் எடையைக் கணக்கிடுவதில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான தரநிலை பின்பற்றப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தங்களின் நகையயிற்குச் சரியான மற்றும் நியாயமான மதிப்பு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. திருப்பிச் செலுத்தும் கெடு மற்றும் ஏல விதிமுறைகள்
கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், கூடுதல் வட்டியுடன் அபராதமும் வசூலிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் கடனை அடைக்கத் தவறினால், வங்கிகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நகைகளை ஏலம் விட சட்டப்பூர்வ அதிகாரம் பெற்றுள்ளன.
55
பயணிகள் கவனத்திற்கு
நகைக்கடன் வாங்கும் சாமானிய மக்கள், கடன் ஒப்பந்தப் பத்திரங்களை முழுமையாகப் படித்துப் பார்த்த பின்னரே கையெழுத்திட வேண்டும். சரியான திட்டமிடலுடன் கடனைத் திருப்பிச் செலுத்துவதன் மூலம் உங்கள் குடும்ப நகைகளைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என நிதி நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.