இதில் மற்றொரு முக்கியமான மாற்றம் மின்னணு சாதனங்கள் தொடர்பானது. மொபைல் ஃபோன், டேப்லெட் அல்லது மடிக்கணினி போன்ற சாதனங்களை வாங்குவதற்காகவே கடன் அல்லது இஎம்ஐ நிதியுதவி எடுக்கப்பட்டு, கடன் வாங்குபவர் தொடர்ந்து பணம் செலுத்தாமல் இருந்தால், குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் அந்த சாதனத்தின் சில செயல்பாடுகளை படிப்படியாகக் கட்டுப்படுத்தும் கடன் வழங்குநர்களுக்கு அனுமதி வழங்கும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எந்த கடனுக்கும் பொதுவாக பயன்படுத்தக்கூடிய அதிகாரம் அல்ல. குறிப்பிட்ட சாதனத்தை வாங்குவதற்காக வழங்கப்பட்ட நிதி மற்றும் முன்கூட்டியே ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட விதிமுறைகள் போன்ற நிபந்தனைகள் முக்கியம்.