பணக்காரர்களை விட ஏழைகள் ரயில் பயணத்தையே அதிகம் நம்பியுள்ளனர். தற்சமயம், நாட்டிலேயே மலிவான பயண முறை ரயில் தான். அத்தகைய ரயிலில் பயணிக்க, ரயில் நிலையங்களில் டிக்கெட்டுக்காக வரிசையில் நிற்க வேண்டியது அவசியம். அங்கும் சில்லறை காரணமாக டிக்கெட் கவுன்டர்களில் அடிக்கடி வாய் வார்த்தைகள் விட்டு சண்டை வருவதுண்டு. இதுபோன்ற சிரமங்களில் இருந்து விடுபட தென்மேற்கு ரயில்வே டிக்கெட் வாங்கும் புதிய முறையை அமல்படுத்தியுள்ளது.