ரயில் டிக்கெட் வாங்கும்போது சில்லறை பிரச்சனை இனி இல்லை.. ரயில்வேயில் வேற லெவல் அம்சம்!

Published : Aug 30, 2024, 03:10 PM IST

தென்மேற்கு ரயில்வே டிக்கெட் வாங்குவதற்கு புதிய QR குறியீடு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் டிக்கெட் கவுண்டர்களில் சில்லரை பிரச்னையின்றி, விரைவாக டிக்கெட் பெற முடியும். இந்த புதிய முறை 87 ரயில் நிலையங்களில் உள்ள 102 யுடிஎஸ் கவுண்டர்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

PREV
14
ரயில் டிக்கெட் வாங்கும்போது சில்லறை பிரச்சனை இனி இல்லை.. ரயில்வேயில் வேற லெவல் அம்சம்!
IRCTC Train Ticket

பணக்காரர்களை விட ஏழைகள் ரயில் பயணத்தையே அதிகம் நம்பியுள்ளனர். தற்சமயம், நாட்டிலேயே மலிவான பயண முறை ரயில் தான். அத்தகைய ரயிலில் பயணிக்க, ரயில் நிலையங்களில் டிக்கெட்டுக்காக வரிசையில் நிற்க வேண்டியது அவசியம். அங்கும் சில்லறை காரணமாக டிக்கெட் கவுன்டர்களில் அடிக்கடி வாய் வார்த்தைகள் விட்டு சண்டை வருவதுண்டு. இதுபோன்ற சிரமங்களில் இருந்து விடுபட தென்மேற்கு ரயில்வே டிக்கெட் வாங்கும் புதிய முறையை அமல்படுத்தியுள்ளது.

24
IRCTC

ரயில் டிக்கெட்டுகளுக்காக பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. டிக்கெட் கவுன்டர்களில் சில்லரை பிரச்னை எழவில்லை. அனைவருக்கும் தீர்வாக கியூஆர் குறியீடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வேயில் க்யூஆர் குறியீடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது, புதிய முறையால் பயணிகள் முழுமையாக திருப்தி அடைந்துள்ளனர் என்றே கூறலாம்.  தென்மேற்கு ரயில்வேயின் கீழ் உள்ள 87 ரயில் நிலையங்களில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

34
Railway Ticket QR Code

102 யுடிஎஸ் (அன் ரிசர்வ்டு டிக்கெட் சிஸ்டம்) கவுண்டர்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது வகுப்பு டிக்கெட் தொகையை செலுத்த QR குறியீடு ஸ்கேனிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் கவுன்டர்களில் QR குறியீடு ஸ்கேனர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  UPI மூலம் டிக்கெட் தொகை செலுத்தப்படுகிறது. இது தவிர, ரயில் நிலையங்களில் உள்ள ஏடிவிஎம்களில் (தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரம்) க்யூஆர் குறியீடு ஸ்கேனிங் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

44
Indian Railways

ரயில்வே பயண டிக்கெட், நடைமேடை டிக்கெட் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் முன்பதிவு முறை மூலம் டிக்கெட் பெற QR குறியீடு ஸ்கேனர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வேயின் கிட்டத்தட்ட அனைத்து நிலையங்களிலும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கவுண்டர்களில் இருந்த சில்லரை பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. நேரமும் மிச்சமாகும்.

ஆதார் இலவச அப்டேட் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை.. செப்டம்பர் 1 முதல் ஏற்படப்போகும் 7 மாற்றங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories