தபால் நிலையத்தின் ஐந்தாண்டு RD திட்டத்தில் நீங்கள் தொடர்ந்து 12 தவணைகளை டெபாசிட் செய்தால், கடன் வசதியைப் பெறலாம். அதாவது, இந்த கடன் வசதியைப் பெற, ஆர்டி திட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தொடர்ந்து டெபாசிட் செய்ய வேண்டும். ஒரு வருடம் கழித்து, உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50% வரை கடன் பெறலாம்.
நீங்கள் கடன் தொகையை மொத்தமாகவோ அல்லது மாதாந்திர தவணைகளிலோ திரும்பச் செலுத்தலாம். நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், RD கணக்கு முதிர்ச்சியடையும்போது கடனும் வட்டித் தொகையும் கழிக்கப்படும். இதற்குப் பிறகு, மீதமுள்ள தொகை உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.