இந்த தேசிய பேமெண்ட் உள்கட்டமைப்பை இயக்க, தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, வாடிக்கையாளர் சேவை, மோசடி தடுப்பு மற்றும் புதுமை ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடு தேவைப்படுகிறது. இந்த செலவுகளை தற்போது வங்கிகள் மற்றும் பேமெண்ட் சேவை வழங்குநர்கள் போன்ற இந்த அமைப்பில் உள்ள நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. இதன் மூலம், தினசரி பயனர்கள் தடையற்ற மற்றும் பாதுகாப்பான அனுபவத்தைப் பெறுகிறார்கள்.
சாத்தியமான கட்டண மாற்றங்கள் குறித்து தெளிவுபடுத்திய கவுன்சில், எந்தவொரு மெர்ச்சன்ட் சேவை கட்டணங்களும், பெரிய வணிகங்களுக்கும் பேமெண்ட் சேவை வழங்குநர்களுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் மட்டுமே என்று வலியுறுத்தியது. அதாவது, வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பேமெண்ட்களைப் பயன்படுத்த ஒருபோதும் பணம் செலுத்த வேண்டியதில்லை.
மேலும், இந்தியா முழுவதும் உள்ள சிறு கடைக்காரர்கள் மற்றும் மளிகைக் கடைகள் UPI-ஐ ஏற்க எந்த மெர்ச்சன்ட் தள்ளுபடி விகித (MDR) கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சிறு வணிகர்களுக்கும் எளிதாகக் கிடைக்கிறது.