அம்பானிகள் நடத்திய பிரம்மாண்ட அரங்கேற்ற விழா
ராதிகா மெர்ச்சன்ட், நீட்டா அம்பானியைப் போலவே பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.. 2022 ஆம் ஆண்டில், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் உள்ள தி கிராண்ட் தியேட்டரில் ராதிகா மெர்ச்சண்டிற்கு அம்பானி குடும்பத்தினர் அரங்கேற்றம் விழாவை ஏற்பாடு செய்தனர். குரு பாவனா தக்கரின் வழிகாட்டுதலின் கீழ் ராதிகா தனது பாரம்பரிய நடனப் பயிற்சியை முடித்தார். இந்த விழாவில் ரன்வீர் சிங், சல்மான் கான் மற்றும் அமீர் கான் போன்ற பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.