நாடு முழுவதும் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களுக்கான திருத்தப்பட்ட கட்டமைப்பை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. புதிய கட்டணங்கள் மே 1, 2025 முதல் அமலுக்கு வரும். இலவச பரிவர்த்தனை வரம்புகள், அந்த வரம்புகளை மீறும்போது வசூலிக்கப்படும் கட்டணங்கள், பரிவர்த்தனைக் கட்டணங்கள் ஆகியவை மாற்றியமைக்கப்படுகின்றன.
இந்த மாற்றங்கள் ஏடிஎம் நெட்வொர்க்குகளின் செயல்பாட்டில் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. இது, வாடிக்கையாளர்களிடம் பெறப்படும் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்காக ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளில் ஒன்றாகவும் அமைகிறது.