மேலும், பெட்ரோல் பங்க் டீலர்களுக்கும் சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன:
"பெட்ரோல் பங்க் டீலர்கள், வாகனங்களின் எரிபொருள் டேங்கில் அல்லது PESO (பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு) அங்கீகரித்த கேன்களில் மட்டுமே டீசலை நிரப்ப வேண்டும். ஒரு வாடிக்கையாளருக்கு அல்லது ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கு மேல் விற்கக் கூடாது. இப்படி விற்கப்படும் டீசலை மறுவிற்பனை செய்யவும் கூடாது" என அந்த அறிவிப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
"பங்குகளில் இப்படி மொத்தமாக டீசல் வாங்குவது, பதுக்கலுக்கும், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும். உண்மையான சில்லறை வாடிக்கையாளர்களுக்கு டீசல் கிடைப்பதில் சிக்கலை உருவாக்கும்" என அரசு இந்த நடவடிக்கைக்குக் காரணம் கூறியுள்ளது. உலக அளவில் சில பகுதிகளில் நிலவும் பதட்டமான சூழல், சர்வதேச பெட்ரோலிய விநியோகச் சங்கிலி மற்றும் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதும் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள், முதற்கட்டமாக 90 நாட்களுக்கு அமலில் இருக்கும். அதற்கு முன்பே திரும்பப் பெறப்படலாம் அல்லது தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம். இந்த உத்தரவின் விதிகளை மீறுவோர் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.