Credit Card Users Alert: கிரெடிட் கார்டு பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை. பகுதி தொகை செலுத்துபவர்கள், வெளிநாட்டு பரிவர்த்தனை செய்பவர்கள் மற்றும் அதிகமாக கார்டு பயன்படுத்துவோர் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய விதிகள் என்ன? என்பதை பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாதமும் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தாமல், ஒரு பகுதியை மட்டும் செலுத்தும் வாடிக்கையாளர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய விதிகளின்படி, நிலுவைத் தொகைக்கு மட்டுமல்லாமல் புதிய கொள்முதல் பரிவர்த்தனைகளுக்கும் வட்டி விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
25
எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகளால் பாதிப்பு
எரிபொருள் செலவுகளுக்கான கட்டண வரம்புகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், வாடகை வாகனங்கள், பேருந்து, இரயில் பயணச்சீட்டுகள் மற்றும் சுங்கக் கட்டணங்கள் போன்ற போக்குவரத்து செலவுகளுக்கும் புதிய கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அதிக அளவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் பாதிக்கப்படலாம்.
35
வெளிநாட்டு பரிவர்த்தனைகளும் தாமதக் கட்டணங்களும்
வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில், பில் தொகையை தாமதமாகச் செலுத்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களும் திருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சாதாரண வாடிக்கையாளர்கள் இந்த மாற்றங்களை கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
தனியார் துறை வங்கியான இண்டஸ்இண்ட் வங்கி, தனது கிரெடிட் கார்டு விதிகளில் பல மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் ஜூன் 15 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், வட்டி கணக்கீடு முதல் தாமதக் கட்டணம் வரை பல அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
55
வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
கூடுதல் செலவுகளைத் தவிர்க்க, ஒவ்வொரு மாதமும் முழு பில் தொகையையும் சரியான நேரத்தில் செலுத்துவது சிறந்த நடைமுறையாகும். மேலும், புதிய கட்டணங்கள் மற்றும் சலுகைகள் குறித்து தங்களின் கிரெடிட் கார்டு விதிமுறைகளை முன்கூட்டியே ஆய்வு செய்து, செலவுகளைத் திட்டமிடுவது நிதி ஒழுங்கை மேம்படுத்த உதவும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.