இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டால், பற்பசை, பல் பொடி, குடைகள், தையல் இயந்திரங்கள், பிரஷர் குக்கர்கள், சமையலறை பாத்திரங்கள், அயன்பாக்ஸ், கீசர், சிறிய சலவை இயந்திரங்கள், சைக்கிள்கள், ரூ.1,000 வரை விலை கொண்ட ஆயத்த ஆடைகள், ரூ.500 முதல் ரூ.1,000 வரை விலை கொண்ட காலணிகள், எழுதுபொருட்கள், தடுப்பூசிகள், பீங்கான் ஓடுகள், விவசாய கருவிகள் போன்றவை மலிவாகக் கிடைக்கும். இவை அனைத்தும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள் என்பதால், விலை குறைப்பு நேரடி நன்மையை தரும். ஒரு குடும்பம் மாதம் இந்த பொருட்களில் எதாவது ஒன்றையாவது வாங்கும் சூழல் காணப்படுகிறது. அதனால் செலவுகள் தாராளமாக குறையும்.