கருப்பு மை காசோலைகள்
இந்நிலையில், காசோலை தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய விதிகள் ஒன்றை பிறப்பித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன. அதாவது ''மோசடிகளை தடுக்கும் வகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலைகள் இந்த மாதம் முதல் செல்லாது. இனிமேல் நீலம் மற்றும் பச்சை மையால் எழுதப்பட்ட காசோலைகளை மட்டுமே வங்கிகள் ஏற்றுக் கொள்ளும்'' என்று ஆர்பிஐ உத்தரவிட்டதாக தகவல்கள் வேகமாக பரவின.
காசோலைகளில் கருப்பு மையால் எழுதப்படும் எழுத்துகளை எளிதில் அழித்து விட முடியும் என்பதால் நீலம் மற்றும் பச்சை மையால் எழுதப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆகவே கருப்பு மையால் எழுதப்படும் காசோலைகளை வங்கிகள் நிராகரிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதாக தகவல்கள் கூறின.
அப்படியானால் இனி கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலைகள் செல்லாதா? என வங்கி வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் ஆழந்தனர்.
300 யூனிட் இலவச மின்சாரம், ரூ 78000 வரை மானியம்; மோடி அரசின் மிகப்பெரிய அறிவிப்பு!