இந்த சிறப்பு சுற்றுலாப் பயணம் மொத்தம் 8 இரவுகள், 9 பகல்கள் கொண்டது. பயணம் வரும் ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த சுற்றுலா ரயிலில் மொத்தம் 702 இருக்கைகள் உள்ளன. இதில் 160 ஸ்லீப்பர் கிளாஸ், 3AC-490, 2AC-52 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் தெலங்கானாவில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
9 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில், தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான 7 ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு உங்களை அழைத்துச் செல்வார்கள். ராமேஸ்வரம், கன்னியாகுமரி செல்ல நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த பயணத்தில் திருவண்ணாமலை, சிதம்பரம், திருச்சி, தஞ்சாவூர், ராமேஸ்வரம், மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய முக்கிய இடங்கள் அடங்கும்.
Train Speed : இரவில் ரயில் ஏன் ஸ்பீடாக போகுது தெரியுமா? ராத்திரியில மட்டும் வேகம் அதிகரிக்க காரணம் என்ன? பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான ரகசியங்கள்!