இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக இண்டிகோ விமான நிறுவனம் அமைந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலும் விமான சேவைகளை இயக்கி வருகிறது. குறிப்பாக மிக குறைந்த கட்டணத்தில் உள்நாட்டில் நகரங்களுக்கு இடையே இயக்கப்படுவதால் இந்த விமானத்துக்கு எப்போதும் வரவேற்பு அதிகம்.
இண்டிகோ சிஇஓ ராஜினாமா
அதே வேளையில் பாதுகாப்பு குறைபாடு, தாமதமாக புறப்படுதல், தாமதமாக வந்து சேருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் இண்டிகோ விமானம் கொண்டுள்ளது. இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் சிஇஓ பீட்டர் எல்பர்ஸ், தனது பதவியை இன்று (மார்ச் 10) ராஜினாமா செய்துள்ளார். அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ராகுல் பாட்டியா, நிர்வாகத்தின் இடைக்காலப் பொறுப்பை ஏற்பார் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய ராகுல் பாட்டியா, 'தொழில்முறை நிர்வாகம், செயல்பாட்டு நம்பகத்தன்மை மற்றும் உலகளாவிய அங்கீகாரம் கொண்ட ஒரு விமான நிறுவனமாக இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதில் இண்டிகோ தொடர்ந்து தனது கவனத்தைச் செலுத்தும்' என்று தெரிவித்துள்ளார்.