Lower Berth Rules: இந்தியன் ரயில்வே மூலமாக தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். ரயிலில் கீழ் படுக்கை யாருக்கு முன்னுரிமையுடன் கிடைக்கும்? என்பது குறித்த விதிகள் பலருக்கும் தெரிவதில்லை. இதனைப் பார்க்கலாம்.
நீண்ட தூர ரயில் பயணங்களில் கீழ் படுக்கை கிடைப்பது பலருக்கும் மிகவும் வசதியாக இருக்கும். குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மேல் அல்லது நடுப்படுக்கைக்கு ஏறுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு இது முக்கியமானதாக உள்ளது. இதன் காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கீழ் படுக்கைக்கு அதிக தேவை உள்ளது. ஆனால், முன்பதிவு செய்யும் ஒவ்வொரு பயணிக்கும் கீழ் படுக்கை கிடைக்கும் என்று கூற முடியாது. பயணிகளின் வயது, உடல்நிலை மற்றும் ரயிலில் கிடைக்கும் படுக்கைகளின் எண்ணிக்கை போன்றவற்றை கருத்தில் கொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
25
முதியோருக்கான கீழ் படுக்கை விதிகள்
முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது ரயில்வேயின் முக்கிய ஏற்பாடுகளில் ஒன்றாகும். வயதான பயணிகள் மேல் அல்லது நடுப்படுக்கைக்கு மீண்டும் மீண்டும் ஏறி இறங்க வேண்டிய சிரமத்தை தவிர்க்கும் நோக்கில், கீழ் படுக்கைகளில் கிடைக்கும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குறிப்பாக தனியாகப் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு இந்த வசதி முக்கியமானதாக இருக்கிறது. இருப்பினும், ரயிலில் கீழ் படுக்கைகள் குறைவாக இருந்தால் ஒவ்வொரு முதிய பயணிக்கும் கீழ் படுக்கை கிடைக்கும் என்பதை உறுதி செய்ய முடியாது. எனவே முன்னுரிமை இருப்பது என்பது கட்டாய ஒதுக்கீடு என்பதல்ல.
45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கும் கீழ் படுக்கை ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் வகையில் ரயில்வேயின் முன்பதிவு முறையில் ஏற்பாடுகள் உள்ளன. முன்பதிவு செய்யும்போது குறிப்பிட்ட படுக்கையைத் தேர்வு செய்யாத நிலையிலும், தகுதியான கீழ் படுக்கை கிடைத்தால் அந்த முன்னுரிமை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலாம். நீண்ட தூரப் பயணங்களில் பெண்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ரயில்வே விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கிடைக்கும் படுக்கைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே இறுதி ஒதுக்கீடு அமையும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கீழ் படுக்கை தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன. கர்ப்ப காலத்தில் மேல் அல்லது நடுப்படுக்கைக்கு ஏறுவது சிரமமாகவும் அசௌகரியமாகவும் இருக்கலாம். இதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கீழ் படுக்கை கிடைக்கும் வகையில் ரயில்வே முன்பதிவு அமைப்பில் முன்னுரிமை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணத்தின் போது கர்ப்பிணிப் பெண்ணுக்கு கீழ் படுக்கை ஒதுக்கப்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகரிடம் தெரிவிக்க உதவி கோரலாம். கிடைக்கும் வசதிக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படலாம்.
கீழ் படுக்கைகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ரயிலிலும் ஒரே மாதிரியாக இருக்காது. பொதுவாக படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கீழ் படுக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், ரயிலில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் வகையைப் பொறுத்து இந்த எண்ணிக்கை மாறுபடலாம். முக்கியமாக, முன்னுரிமை இருப்பது கீழ் படுக்கை உறுதி என்பதைக் குறிக்காது. ரயிலில் கிடைக்கும் படுக்கைகள், பயணிகளின் தகுதி மற்றும் முன்பதிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில்தான் இறுதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு கிடைத்த படுக்கை விவரங்களையே பயணிகள் இறுதி ஒதுக்கீடாகக் கருத வேண்டும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.