இந்திய வரி விதிகளின்படி, நீங்கள் இந்திய குடியிருப்பாளராக இருந்தால், உங்கள் உலகளாவிய வருமானம் முழுவதும் வரிக்குட்படும். அதாவது, வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் ஈவுத்தொகை அல்லது பிற வருமானங்களையும் ITR-ல் அறிவிக்க வேண்டும். பலர், அமெரிக்க நிறுவனங்கள் முன்பே சுமார் 25% வரியை கழித்து ஈவுத்தொகை வழங்குவதால், அதை மீண்டும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறார்கள். ஆனால் இது தவறான புரிதல். முழு வருமானத்தையும் தெரிவிக்க வேண்டும்; பின்னர் வெளிநாட்டு வரி கடன் (FTC) மூலம் இரட்டை வரிவிதிப்பு-ஐ தவிர்க்கலாம்.