பெண்கள் பெயரில் வீடு வைத்திருப்பது, குடும்பத்தின் பாதுகாப்பை அதிகரிக்கிறது. கணவருக்கு எதிர்பாராத நிதி சிக்கல்கள் ஏற்பட்டாலும், மனைவியின் பெயரில் உள்ள சொத்து சட்ட ரீதியாக அவருடைய உரிமையாக இருக்கும். இது பெண்களின் சமூக நிலையை உயர்த்துவதோடு, குடும்ப நலனுக்கும் உறுதுணையாக இருக்கும்.
கவனிக்க வேண்டிய சில அம்சங்கள்
- மனைவிக்கு தனிப்பட்ட வருமானம் இல்லாவிட்டால், அந்தச் சொத்து மூலம் வரும் வருமானம் கணவரின் பெயரில் வரி விதிக்கப்படும்.
- சில நேரங்களில் கூட்டு உரிமையாளராக கணவரும் பெயர் சேர்த்தால், வங்கி கடனில் சுலபமாக அனுமதி கிடைக்கும்.
- பெண்கள் பெயரில் வீடு வாங்கினால், எதிர்காலத்தில் விற்பனை செய்வதற்கான ஆவணங்கள், வாரிசு உரிமை போன்றவற்றையும் கவனமாக திட்டமிடுவது அவசியம்.
மனைவியின் பெயரில் வீடு வாங்குவது, நிதி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பல நன்மைகளை தருகிறது. முத்திரை வரி தள்ளுபடி, வட்டி சலுகை, வருமான வரிச் சலுகை, அரசு திட்ட நன்மைகள் என பல்வேறு வழிகளில் லட்சக்கணக்கில் சேமிப்பு கிடைக்கும். அதே நேரத்தில், பெண்களின் சொத்து உரிமை அதிகரித்து, குடும்பத்தின் பாதுகாப்பும் உறுதியானதாகிறது. அதனால், அடுத்த முறை வீடு வாங்கும் திட்டம் போட்டால், மனைவியின் பெயரில் பதிவு செய்வது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.