செலவுகளைக் கணக்கிட்ட பிறகு, ஓய்வுபெறும்போது கிடைக்கும் மொத்த கார்பஸ் அளவு வளர நேரம் அளிக்கும் வகையில், முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே சீக்கிரம் சேமிக்கத் தொடங்கிவிடுவது சிறப்பான அணுகுமுறையாக இருக்கும். சேமிப்பதைத் தொடங்கினால் மட்டும் போதாது, அதனை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். மிக முக்கியமான முதல் படியாகும்.முதலில் தனக்குத் தேவையான கார்பஸை மதிப்பிட வேண்டும். பணவீக்க விகிதம், முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் விகிதம் ஆகியவை முதலில் கவனிக்க வேண்டியவை. முதலீடு பணவீக்க விகிதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும், இல்லையெனில் காலப்போக்கில் பணத்தின் மதிப்பு குறைந்தால், சிக்கல் வரும்.