பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தொழில் தொடங்க ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் வகுப்பினை சார்ந்த தனி நபர்கள் சிறு தொழில் தொடங்க குறைந்த விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் இதற்கான நிதியுதவியை வழங்கி வருகிறது.
கடன் பங்கு தொகை :
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு 85%
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தின் பங்கு – 10%
பயனாளியின் பங்கு – 05%