அதிக நெரிசலில் இயங்கும் இந்த பாதை, இரட்டை வழித்தடமாக மாறுவதால் ரயில் சேவைகள் அதிகரித்து, பயண நேரம் குறையும். இந்த திட்டம் சென்னை புறநகர் சுற்றுவட்ட ரயில் இணைப்பின் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.
சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு முக்கியமான கட்டமைப்பு பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. அரக்கோணம்–செங்கல்பட்டு இடையே 68 கி.மீ. ரயில் பாதையை இரட்டை வழித்தடமாக மாற்றும் ரூ.993 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது. நீண்ட காலமாக அதிக நெரிசலில் இயங்கி இந்த பாதைக்கு இந்த திட்டம் பெரிய நிவாரணமாக பார்க்கப்படுகிறது.
25
இரட்டை ரயில் பாதைக்கு ஒப்புதல்
தற்போது ஒற்றை வழித்தடமாக செயல்படும் இந்த ரயில் பாதை, காஞ்சிபுரம், திருமால்பூர், தக்கோலம், வாலாஜாபாத் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. திறனை மீறி 104% முதல் 105% வரை பயன்பாட்டில் இயங்கும் இந்த பாதையில், ரயில் சேவைகளை அதிகரிப்பது சவாலாக இருந்தது. இதனால் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து இரண்டிலும் அழுத்தம் அதிகரித்தது.
35
சென்னை புறநகர் சுற்றுவட்ட ரயில் இணைப்பு
இந்த திட்டம், சென்னை புறநகர் சுற்றுவட்ட ரயில் இணைப்பு திட்டத்தின் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. சென்னை பீச், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆவடி ஆகிய பகுதிகளை இணைக்கும் பெரிய ரயில் பாதையில் இது முக்கியமானது. திட்டம் நிறைவேறினால், தற்போதைய நீண்ட வழித்தடத்தை விட நேரடி மற்றும் வேகமான புறநகர் இணைப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ரயில்வே தரப்பின் கணக்குப்படி, இந்த பாதையில் தினசரி இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கலாம். தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே இயங்கும் சேவைகள், எதிர்காலத்தில் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நேர்த்தி, தாமதக் குறைவு மற்றும் பயண வசதி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
55
சுற்றுப்புற வளர்ச்சிக்கான முதலீடு
இந்த பாதை பயணிகள் மட்டுமல்ல, தொழிற்பேட்டைகள் மற்றும் எதிர்கால பரந்தூர் விமான நிலைய இணைப்புக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் ரயில் திட்டம், சென்னை மற்றும் சுற்றுப்புற வளர்ச்சிக்கான முக்கிய முதலீடாக இது கருதப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.