பிஎப் வட்டி சரியாக வரவு ஆக வேண்டுமெனில், UAN எண் செயல்பாட்டில் இருக்க வேண்டும். அதோடு, ஆதார், பான் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், வட்டி வரவு ஒரே நாளில் அனைத்து உறுப்பினர்களின் கணக்குகளுக்கும் சேர்க்கப்படாது. பல கட்டங்களாக வரவு வைக்கப்படுவதால், ஜூலை 15-ஆம் தேதி தொகை வரவில்லை என்றால் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை.
பிஎப் கணக்கில் சேரும் இந்த 8.25 சதவீத வட்டி, பணியாளர்களின் நீண்டகால சேமிப்பை மேலும் அதிகரிக்க உதவும் என்பதால், ஊழியர்கள் தங்களது கணக்கு விவரங்களை உடனடியாக சரிபார்த்துக் கொள்ளுமாறு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.