சென்னையில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. ஏப்ரல் 23 நிலவரப்படி, 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையிலும் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே ஆபரணத் தங்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக, தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
25
அதாவது ஒரு லட்சத்து பத்தாயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. இது சாமானிய மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு தான் நகை விலை ஏறினாலும் நகை கடைகளில் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில் இன்றை தங்கம் விலை ஏறியதா இறங்கியதா என்பதை பார்ப்போம்.
35
நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,250க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்றைய (ஏப்ரல் 23) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,280ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,160ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15,447ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.123,576ஆக விற்பனையாகிறது.
55
வெள்ளி விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று ரூ.5 குறைந்துள்ளது. ஒரு கிராம் விலை ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.270,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே வெள்ளி விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில் நகை வாங்குவோர் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.