சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,120 குறைந்து ₹91,200 ஆக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கவனம் செலுத்துவதால் தங்கம் விலை குறைந்துள்ளதாகவும், வரும் வாரத்திலும் இந்த சரிவு தொடர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய் கிழமை காலையிலேயே சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்து இல்லத்தரசிகளை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் சந்தோஷத்துடன் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர். அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு 2 லட்டுக்கள்தான்.!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ரூ.11400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 1,120 ரூபாய் குறைந்து 91,200 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை 1 கிராம் 170 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட 3 ரூபாய் குறைவாகும். ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22
வரும் வாரத்தில் விலை குறையுமாம்
அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து பங்குச் சந்தையில் முதலீடுகளை உயர்த்தி வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.