அமெரிக்க அரசின் சாத்தியமான ஷட்டவுன் (அரசு முடக்கம்) காரணமாக முக்கிய பொருளாதார தரவுகள் தாமதமாகி, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக தங்கத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர்.ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் ஏற்படும் அரசியல் பதற்றங்கள் (geopolitical tensions) தங்கத்தின் தேவையை அதிகரிக்கின்றன.பெட் (அமெரிக்க கடன் வங்கி) போன்றவை வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு (dovish policies), டாலர் மதிப்பு குறைவு, பாண்ட் யீல்டுகள் (bond yields) இறங்குதல் ஆகியவை தங்கத்தை ஈர்க்கின்றன. தீபாவளி, கல்யாணங்கள் போன்ற பண்டிகை தேவை, ரூபாயின் டாலருக்கு எதிரான மதிப்பு குறைவு (rupee depreciation), ETF (எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்ஸ்) முதலீடுகள் அதிகரித்தல், மத்திய வங்கிகள் (RBI உட்பட) தங்கம் வாங்குதல் ஆகியவை தங்கம் விலை உச்ச்துக்கு கொண்டு செல்கின்றன என சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.