ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் திடீரென குறைந்து வருவது, இல்லத்தரசிகள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமண சீசன், பண்டிகைகள் என விலை உயர்வால் தவித்தவர்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தை போக்கு, டாலர் மதிப்பு ஏற்ற இறக்கம், இறக்குமதி வரி மாற்றங்கள் போன்ற காரணங்களால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை சந்தையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.11,300 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு (8 கிராம்) ரூ.1,200 குறைவு ஏற்பட்டு ரூ.90,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வார உச்சத்தை ஒப்பிடுகையில் கணிசமான சரிவு. பல மாதங்களாக ரூ.12,000க்கு மேல் இருந்த கிராம் விலை தற்போது குறைந்தது ஆபரணங்கள் வாங்குவோருக்கு ஊக்கமளிக்கிறது.