ரஷ்யா, உக்ரைன் இடையே போர்ச் சூழல் குறைந்து வருவது, டிரம்ப் இந்த திசையில் அடி எடுத்து வைப்பது போன்ற காரணங்களால் உலகச் சந்தையில் தாக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்ததால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்தது. தற்போது ரஷ்யா, உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் போர் முடிவுக்கு வரும் வாய்ப்புகள் தென்படுகின்றன. இதனால் பங்குச் சந்தைகள் உயர்ந்து வருகின்றன. தங்கத்தின் விலை குறைந்து வருவது இதற்கு சான்று என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு கணிப்பின்படி வரும் நாட்களில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2800 டாலர்களாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.