உங்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், நகையை விற்றுவிடுவது சில நேரங்களில் சிறந்த முடிவாக இருக்கலாம். விற்பனை செய்தால், மாதந்தோறும் EMI அல்லது வட்டி கட்ட வேண்டிய சுமை இருக்காது.
குறிப்பாக, பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் நகைகள் அல்லது முதலீட்டுக்காக வாங்கப்பட்ட தங்கத்தை விற்பனை செய்வது, தேவையற்ற கடன் சுமையைத் தவிர்க்க உதவும்.
எப்போது அடமானம் வைக்கலாம்?
• சில மாதங்களில் பணப் பிரச்சினை சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தால்.
• நகை குடும்ப நினைவுச் சின்னமாக இருந்தால்.
• குறுகிய காலத்திற்கான பணத் தேவை என்றால்.
• வட்டித் தொகையைச் செலுத்தும் திறன் இருந்தால்.