இந்த பயிற்சியில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், சுயதொழில் வாய்ப்பையும் ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆர்வமுள்ளவர்கள் தாமதிக்காமல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சியில் சேர விரும்புவோர் கூடுதல் தகவல்களுக்கும் முன்பதிவிற்கும் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்: 87783 23213, 72006 50604, 0424-2400338
வீட்டிலிருந்தே வேலை செய்து குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு, இந்த இலவச தையற்கலை பயிற்சி ஒரு அரிய வாய்ப்பாகும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற அனைவரும் பயன் அடையலாம்.